சென்னையில் டிச.1ம் தேதி மாநில போட்டிக்கு மாற்றுத் திறனாளிகள் தேர்வு
Posted by
vetri nadai
on Wednesday, November 17, 2010
/
Comments: (1)
திருநெல்வேலி : மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பாளையில் நடந்தது. பாளை காது கேளோதோர் பள்ளியில் நேற்று காலையில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதனை செஞ்சிலுவை சங்கம் பிரபாகர் துவக்கி வைத்தார். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மனோகர் வரவேற்றார். இதில்
அனவரதநல்லூர் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்ல நிர்வாகி டாக்டர் கருணா செல்லையா, புறநகர் ரோட்டரி சங்க தலைவர் நயினா முகம்மது, ஐ.ஓ.பி ராமசாமி, காது கேளோதோர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திர மோகன், பார்வையற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் கிங்ஸ்டன், புனித அன்னாள் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சபீனா, மாற்றுத் திறனாளிகள் அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அனவரதநல்லூர் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்ல நிர்வாகி டாக்டர் கருணா செல்லையா, புறநகர் ரோட்டரி சங்க தலைவர் நயினா முகம்மது, ஐ.ஓ.பி ராமசாமி, காது கேளோதோர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திர மோகன், பார்வையற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் கிங்ஸ்டன், புனித அன்னாள் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சபீனா, மாற்றுத் திறனாளிகள் அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் ஓட்டப் பந்தயம், டிரை சைக்கிள், வீல் சேர், பார்வையற்றோருக்கான ஓட்டப் பந்தயம் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் கை, கால் ஊனமுற்றோர், செவித்திறன் குறைவுற்றோர், பார்வையற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் உட்பட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
ஊனம் என்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக இருக்க கூடாது."
Posted by
vetri nadai
/
Comments: (1)
திருத்தணி : இரு கைகள் இல்லாத பெண் ஒருவர், தனக்கு தேவையான அனைத்து வேலைகளை தானே செய்துக் கொள்வதுடன், தந்தைக்கு உதவியாக ஓட்டல் தொழிலிலும் ஈடுபடுகிறார்.
மனிதனுக்கு ஊனம் என்றால், வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டும். இவர்கள் பெற்றோருக்கு பாரம் என சிலர் நினைக்கின்றனர். ஊனமுற்றவர்கள் உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என, உறவினர்கள் நினைக்கும் இந்த காலத்தில் இரு கைகளை இழந்த ஒரு பெண் பெற்றோருக்கும் உதவியாக வேலை செய்கிறார்
.இந்த இளம்பெண்ணின் பெயர் பரமேஸ்வரி(28). இவர் ஐந்தாவது வரை படித்துள்ளார். பிறவிலேயே இரு கைகள் இல்லை. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் குருவப்ப நாயுடு கண்டிகையில் பிறந்த இவருடைய தந்தை பெயர் மணிவேல்; தாய் ஹெலன்.இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள். மூன்று பெண்கள், 2 ஆண்கள். இதில் மூத்தபெண் பரமேஸ்வரி.
மணிவேல் கே.ஜி.கண்டிகை பஜாரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அடுப்பு எரிப்பது, காய்கறி வெட்டி கொடுப்பது, பாத்திரங்கள் தேய்ப்பது உள்பட பல்வேறு பணிகளை பரமேஸ்வரி கால்களால் செய்கிறார்.இது தவிர வீட்டில் துணி துவைப்பது, தலைவாரி பூ முடிப்பது,கேஸ் அடுப்பு பற்ற வைப்பது, புத்தகம் படிப்பது, எழுதுவது, மொபைல் போன் பேசுவது உட்பட, அனைத்து வேலைகளையும் அவரே இரு கால்களால் செய்து கொள்கிறார்.
இது குறித்து பரமேஸ்வரி கூறியதாவது: "ஊனம் என்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக இருக்க கூடாது. ஊனமாக பிறந்துவிட்டோமே என்று கவலைப்படாமல், மனத் தைரியத்துடன் செயல்பட வேண்டும். நாம் மற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல், நம்முடைய வேலைகளை நாமே செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.அதே போல் பெற்றோருக்கு நம்மால் முடிந்த உதவிகளையும் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சிலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனமான செயல். ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் தனித் திறமை உள்ளது. அதை தைரியத்துடன் செயல்படுத்தினால், நினைத்ததை சாதித்து காட்டலாம்.எனக்கு இரு கைகள் இல்லை என்றாலும், அனைத்து வேலைகளையும் நானே செய்துக் கொள்ளும் திறமை என்னிடம் உள்ளது. ஆகையால், தமிழக அரசு எனக்கு கடை வைப்பதற்கு நிதியுதவி வழங்கினால், நான் கடை வைத்து அதில் திறம்பட வியாபாரம் செய்து வாழ்க்கையில் முன்னேறி காட்டுவேன்.இவ்வாறு பரமேஸ்வரி கூறினார்.
இரு கைகளும், ஆரோக்கியமும், வாய்ப்பும், வசதிகளும் இருந்தும் சோம்பேறிகளாக சுற்றி வருபவர்கள் இடையே, இரு கைகளும் இல்லாமல் வாழ்க்கையில் போராடிவரும் பெண்ணை பார்த்து அப்பகுதி மக்கள் வியக்கின்றனர்.
Read more
மனிதனுக்கு ஊனம் என்றால், வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டும். இவர்கள் பெற்றோருக்கு பாரம் என சிலர் நினைக்கின்றனர். ஊனமுற்றவர்கள் உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என, உறவினர்கள் நினைக்கும் இந்த காலத்தில் இரு கைகளை இழந்த ஒரு பெண் பெற்றோருக்கும் உதவியாக வேலை செய்கிறார்
.இந்த இளம்பெண்ணின் பெயர் பரமேஸ்வரி(28). இவர் ஐந்தாவது வரை படித்துள்ளார். பிறவிலேயே இரு கைகள் இல்லை. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் குருவப்ப நாயுடு கண்டிகையில் பிறந்த இவருடைய தந்தை பெயர் மணிவேல்; தாய் ஹெலன்.இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள். மூன்று பெண்கள், 2 ஆண்கள். இதில் மூத்தபெண் பரமேஸ்வரி.
மணிவேல் கே.ஜி.கண்டிகை பஜாரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அடுப்பு எரிப்பது, காய்கறி வெட்டி கொடுப்பது, பாத்திரங்கள் தேய்ப்பது உள்பட பல்வேறு பணிகளை பரமேஸ்வரி கால்களால் செய்கிறார்.இது தவிர வீட்டில் துணி துவைப்பது, தலைவாரி பூ முடிப்பது,கேஸ் அடுப்பு பற்ற வைப்பது, புத்தகம் படிப்பது, எழுதுவது, மொபைல் போன் பேசுவது உட்பட, அனைத்து வேலைகளையும் அவரே இரு கால்களால் செய்து கொள்கிறார்.
இது குறித்து பரமேஸ்வரி கூறியதாவது: "ஊனம் என்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக இருக்க கூடாது. ஊனமாக பிறந்துவிட்டோமே என்று கவலைப்படாமல், மனத் தைரியத்துடன் செயல்பட வேண்டும். நாம் மற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல், நம்முடைய வேலைகளை நாமே செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.அதே போல் பெற்றோருக்கு நம்மால் முடிந்த உதவிகளையும் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சிலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனமான செயல். ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் தனித் திறமை உள்ளது. அதை தைரியத்துடன் செயல்படுத்தினால், நினைத்ததை சாதித்து காட்டலாம்.எனக்கு இரு கைகள் இல்லை என்றாலும், அனைத்து வேலைகளையும் நானே செய்துக் கொள்ளும் திறமை என்னிடம் உள்ளது. ஆகையால், தமிழக அரசு எனக்கு கடை வைப்பதற்கு நிதியுதவி வழங்கினால், நான் கடை வைத்து அதில் திறம்பட வியாபாரம் செய்து வாழ்க்கையில் முன்னேறி காட்டுவேன்.இவ்வாறு பரமேஸ்வரி கூறினார்.
இரு கைகளும், ஆரோக்கியமும், வாய்ப்பும், வசதிகளும் இருந்தும் சோம்பேறிகளாக சுற்றி வருபவர்கள் இடையே, இரு கைகளும் இல்லாமல் வாழ்க்கையில் போராடிவரும் பெண்ணை பார்த்து அப்பகுதி மக்கள் வியக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு இப்போது ஒரே வாரத்தில் சான்றிதழ்
Posted by
vetri nadai
on Tuesday, November 16, 2010
/
Comments: (0)
மாற்றுத் திறனாளிகளுக்கு இப்போது ஒரே வாரத்தில் சான்றிதழ் அளிக்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் திங்கள்கிழமை மத்திய சமூக நீதி இணை அமைச்சர் நெப்போலியன் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருந்தது: மாற்றுத்திறனாளிகளின் நிலைமையை உணர்ந்து அவர்கள் சான்றிதழை பெறுவதற்கான நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த 1996-ம் ஆண்டு விதிமுறை கடந்த ஆண்டே திருத்தி அமைக்கப்பட்டுள்ளது
.
.
உடலில் வெளிப்படையாகத் தெரியும் ஊனம் என்றால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார மையங்களில் பணிபுரியும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம். உடலில் வெளிப்படையாகத் தெரியாத ஊனமாக இருந்தால் மட்டுமே மருத்துவ வாரியத்திடம் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்த நாளில் இருந்து 7 நாள்களுக்குள் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். சில தவிர்க்க முடியாத காரணமாக இருந்தாலும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகக்கூடாது என்று கூறியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு கடன்: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 1,40,298 தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி, வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் திங்கள்கிழமை மத்திய சமூக நீதி இணை அமைச்சர் நெப்போலியன் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் 31,340 குடும்பங்கள், கர்நாடகத்தில் 30,517 குடும்பங்கள், மகாராஷ்டிரத்தில் 29,097 குடும்பங்களுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்
வேலைவாய்ப்பு புதுப்பித்தல்: மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
Posted by
vetri nadai
on Friday, November 12, 2010
/
Comments: (0)
சென்னை : வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் புதுப்பிக்க தேவையில்லை என, அரசு அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பு துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கணினி ஒருங்கிணைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
மாற்றுத் திறனாளிகளான அனைத்து பதிவுதாரர்களுக்கும் அதாவது, பார்வையற்றோர், செவி இழந்தோர், வாய் பேசாதோர், மனநலம் குன்றியோர், உடல் உறுப்பு பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பித்தல் செய்வதில் இருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளான அனைத்து பதிவுதாரர்களுக்கும் அதாவது, பார்வையற்றோர், செவி இழந்தோர், வாய் பேசாதோர், மனநலம் குன்றியோர், உடல் உறுப்பு பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பித்தல் செய்வதில் இருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
டிச., 3 மாற்றுத் திறனாளிகள் தினம் மாநில விருதுகளுக்கு வரவேற்பு
Posted by
vetri nadai
on Thursday, November 11, 2010
/
Comments: (0)
டிசம்பர் 3ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியவர்கள் மாநில விருதுகள் பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழகத்தில் டிசம்பர் 3ம் தேதி மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத் திறன் படைத்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களும்,
அவர்களுக்காக சேவை புரிந்தோருக்கு மாநில விருதுகளும் வழங்கப்படும்.மிகச் சிறப்பாக பணியாற்றி சுயதொழில் புரிந்து வரும் மாற்றுத் திறனாளிகள், மிகச் சிறந்த முறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்கள், மிகச் சிறப்பாக மறுவாழ்வு உதவிகளை அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள், சமூகப் பணியாளர்கள், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கி வரும் தொழில் நிறுவனங்கள், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும்.இவ்விருதுகளுக்காக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இம்மாதம் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது சென்னையில் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்திலோ கிடைக்கும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்காக சேவை புரிந்தோருக்கு மாநில விருதுகளும் வழங்கப்படும்.மிகச் சிறப்பாக பணியாற்றி சுயதொழில் புரிந்து வரும் மாற்றுத் திறனாளிகள், மிகச் சிறந்த முறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்கள், மிகச் சிறப்பாக மறுவாழ்வு உதவிகளை அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள், சமூகப் பணியாளர்கள், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கி வரும் தொழில் நிறுவனங்கள், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும்.இவ்விருதுகளுக்காக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இம்மாதம் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது சென்னையில் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்திலோ கிடைக்கும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.