மாற்றுத் திறனாளிகளுக்கு இப்போது ஒரே வாரத்தில் சான்றிதழ் அளிக்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் திங்கள்கிழமை மத்திய சமூக நீதி இணை அமைச்சர் நெப்போலியன் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருந்தது: மாற்றுத்திறனாளிகளின் நிலைமையை உணர்ந்து அவர்கள் சான்றிதழை பெறுவதற்கான நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த 1996-ம் ஆண்டு விதிமுறை கடந்த ஆண்டே திருத்தி அமைக்கப்பட்டுள்ளது
.
.
உடலில் வெளிப்படையாகத் தெரியும் ஊனம் என்றால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார மையங்களில் பணிபுரியும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம். உடலில் வெளிப்படையாகத் தெரியாத ஊனமாக இருந்தால் மட்டுமே மருத்துவ வாரியத்திடம் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்த நாளில் இருந்து 7 நாள்களுக்குள் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். சில தவிர்க்க முடியாத காரணமாக இருந்தாலும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகக்கூடாது என்று கூறியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு கடன்: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 1,40,298 தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி, வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் திங்கள்கிழமை மத்திய சமூக நீதி இணை அமைச்சர் நெப்போலியன் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் 31,340 குடும்பங்கள், கர்நாடகத்தில் 30,517 குடும்பங்கள், மகாராஷ்டிரத்தில் 29,097 குடும்பங்களுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்
0 comments:
Post a Comment