சென்னையில் டிச.1ம் தேதி மாநில போட்டிக்கு மாற்றுத் திறனாளிகள் தேர்வு

திருநெல்வேலி : மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பாளையில் நடந்தது. பாளை காது கேளோதோர் பள்ளியில் நேற்று காலையில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதனை செஞ்சிலுவை சங்கம் பிரபாகர் துவக்கி வைத்தார். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மனோகர் வரவேற்றார். இதில்
அனவரதநல்லூர் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்ல நிர்வாகி டாக்டர் கருணா செல்லையா, புறநகர் ரோட்டரி சங்க தலைவர் நயினா முகம்மது, ஐ.ஓ.பி ராமசாமி, காது கேளோதோர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திர மோகன், பார்வையற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் கிங்ஸ்டன், புனித அன்னாள் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சபீனா, மாற்றுத் திறனாளிகள் அமைப்புகளின் நிர்வாகிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


போட்டியில் ஓட்டப் பந்தயம், டிரை சைக்கிள், வீல் சேர், பார்வையற்றோருக்கான ஓட்டப் பந்தயம் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் கை, கால் ஊனமுற்றோர், செவித்திறன் குறைவுற்றோர், பார்வையற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் உட்பட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

1 comments:

மதுரை சரவணன் said...

போட்டியில் கலந்து கொண்டதே வெற்றி பெற்றதற்கு சமம். பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers