வன்செயலால் பாதித்த மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு


திருச்சி: "திருச்சி மாவட்டத்தில் வன்செயல்களால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது,' என கலெக்டர் சவுண்டையா தெரிவித்துள்ளார்.


அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் வன்செயல்களால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வாரிசுக்கு 10 ஆயிரம் ரூபாயும்,
வன்செயல்களால் காயமடைந்த மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 5,000 ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படும். வழக்கு சம்பந்தமாக ஒருமுறை நீதிமன்றத்துக்கு செல்ல 200 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.


ஒரு வழக்குக்கு அதிகப்பட்சமாக 2,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும். அதேபோல், மாற்றுத்திறனாளிகளின் வழக்குகளில் இலவசமாக சேவை செய்யும் வக்கீலுக்கு பயணப்படி 500 ரூபாய் வழங்கப்படும். வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராக 300 ரூபாய், காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி போலீஸ் ஸ்டேஷன் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணையின் போது அவர்களது சைகை மொழியினை மொழிபெயர்க்கும் சிறப்பாசிரியருக்கு (பயணப்படி மற்றும் தினப்படி சேர்க்காமல்) ஒரு முறை வருவதுக்கு 300 ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


இத்திட்டத்தில் பயனடைய மாற்றுத்திறனாளி விபத்து சம்பந்தமாக முதல்வர் நிவாரண உதவியோ அல்லது வேறுஉதவித்தொகையோ பெற்றிருக்க கூடாது. திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் வன்செயல்களால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, "மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுலகம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புறம், சார்நிலை கருவூலம் அருகில் கண்டோன்மெண்ட், திருச்சி' என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers