இலவச சீருடை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் விழா

           திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் மற்றும் நேயம் அறக்கட்டளை இணைந்து மாற்றுத் திறனுடைய மாணவ
மாணவியர் மற்றும் மாற்றுத் திறனுடையோரின் குழந்தைகளுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா திருச்சி, மரக்கடை,  சையது முர்துசா பள்ளியில் நடைபெற்றது.



     இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளிமாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் மாரிக்கண்ணன் வரவேற்புரையாற்றினார்.
   
     நேயம் அறக்கட்டளையின் தலைவர் மணியன் தலைமையுரையாற்றினார். திருச்சி தொழிலதிபர் எஸ்.பிரதீப், சமூக ஆர்வலர் ஆர்.சுரேஷ் மற்றம் நாகநாதர் உணவகத்தின் மேலாளர் ஏ.ரவி ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டனர்.

     திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியை டாக்டர். பவித்திரா, திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தின் மேலாளர். மு.இராதாகிருஷ்ணன், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையைச் சார்ந்த கே.சரவணன், அரசு பள்ளியின் ஆசிரியர் ஜா.கிஷோர்டேவிட் மற்றும் திருச்சி ஆர்.எம்.எச் கார்பரேசன் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     ஆர்.பாக்கியராஜ், இரா.சுப்பிரமணியன், தேவராஜன், பாலகிருஷ்ணன், கிளமண்ட் மற்றும் மணவாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், பொருளாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

1 comments:

Several tips said...

Good blog is yours.

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers