மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் சலுகை : அசம்பாவிதங்களில் நிதி உதவி


சிவகங்கை : அசம்பாவிதங்களால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு, நிதி மற்றும் சட்ட உதவி அளிக்கும் திட்டத்தை, அரசு செயல்படுத்த உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஓதுக்கீடு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட சலுகைகளை, அரசு வழங்கியுள்ளது. இவர்களின் மீது நடக்கும் தாக்குதல், பாலியல் பலாத்காரத்தால் பலர் உயிர் இழக்கின்றனர். சட்டரீதியான தீர்வு கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
புது திட்டம்: இதை தவிர்க்க,
இவர்களுக்கு நிதி, சட்ட உதவி அளிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி அசம்பாவிதம் அல்லது விபத்தால் பாதிக்கப்படுவோருக்கு உதவ, கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்படும். இதில் மாவட்ட எஸ்.பி., உறுப்பினராகவும், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி செயல் அலுவராகவும் செயல்படுவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க, இக்குழு அரசுக்கு பரிந்துரைக்கும்.
நிதி: கொலையாகும் மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்; விபத்தில் அதிக காயம் அடைந்தால் 5,000; பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 5,000 வழங்கப்படும். கோர்ட்டுக்கு சென்று வர போக்குவரத்து செலவு, ஒரு முறைக்கு 200 ரூபாய் (அதிகபட்சம்); வழக்கு செலவாக 2,000; வக்கீல்களுக்கு, ஒரு அமர்வுக்கு 300 ரூபாய் வழங்கப்படும். காது கேளாதவர்களுடன் கோர்ட்டுக்கு வரும் உதவியாளருக்கு, ஒவ்வொரு முறையும் 300 ரூபாய் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers