புதுக்கோட்டை, ஜூலை 3: புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60 பேருக்கு கல்வி உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
ஆரோக்கியா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் இனியன் தலைமை வகித்தார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் எஸ். ஜார்ஜ்தாஸ் முன்னிலை வகித்தார்.
கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் பெர்ணத்மேரி சூசைராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
விழாவில், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெர்ணத்மேரி சூசைராஜ் இந்த உதவிகளை வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயகுமார், ராமசாமி, மணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment