செம்மொழி மாநாடு முதல்வருக்கு மாற்று திறனாளிகள் பாராட்டு

சென்னை, ஜூலை.1
தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளர் அரசு பணியாளர் ஒன்றியத்தின் மாநில தலைவர் ஆவின் கோபிநாத் முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உலகமே வியக்கும் வண்ணம் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் மாற்றுத்திறன் படைத்தவர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்து மாற்றுத் திறனாளிகள் கஷ்டப்படாத வாறு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன.

5 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளித்து பங்கேற்க செய்த மைக்காக முதல்-அமைச்சர் கலைஞருக்கும், துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், கனிமொழி எம்.பி.க்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers