விழுப்புரம், ஜூலை 5 மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட உடல் ஊனமுற்றோர் சமூக சேவை நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
÷சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் பொறியாளர் மு.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
÷மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு 15-ம் தேதி தன்னம்பிக்கை விருது வழங்குவது, சேலத்தில் 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வது, விரைவு ரயில்களில் தனி வசதிகள் கொண்ட முன்பதிவற்ற ரயில்பெட்டிகள் இணைக்கப்படும் என்று அறிவித்த அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
÷கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் சென்னகுணம் சிவக்கொழுந்து வரவேற்றார், நிர்வாகிகள் சக்திவேல், லட்சுமிபதி, வீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜோதி, வித்யா, முகுந்தன், பாஸ்கர், சரோஜா, ராஜாங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment