மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி


மதுரை, ஜூலை 3: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டு, ஆனால் இரு கைகள் நல்ல நிலையில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பணிபுரியும் நபர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்ற மாணவர்கள் தங்கள் பள்ளி முதல்வரிடமிருந்து படிப்புச் சான்றிதழுடனும், பணிபுரிவோர் தங்கள் நிறுவனத் தலைவரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழுடனும், வெள்ளைத் தாளில் விண்ணப்பம் எழுதி, வில்லாபுரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான மேல் விவரங்களுக்கு 2679695 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

1 comments:

V.P. said...

மாற்றுத் திறனாளி தமிழக அரசு 48 வகையான நலத் திட்ட உதவிகள் what are those please give detailed

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers