14 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி பொருத்திய மோட்டார் சைக்கிள்கள்

கிருஷ்ணகிரி, ஜூலை 6  கிருஷ்ணகிரியில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.48 லட்சம் மதிப்பிலான பேட்டரி பொருத்திய மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு இவற்றை மாவட்ட ஆட்சியர் வி.அருண்ராய் வழங்கினார்.  கூலியத்தைச் சேர்ந்த மணிலா, பெருகோபனப்பள்ளி தரன், கிருஷ்ணகிரி வெங்கடேசன், பெத்தனப்பள்ளி வெங்கடப்பன், ஊத்தங்கரை சத்தியபோஸ், நலகுண்டலப்பள்ளி ஈஸ்வரி உள்ளிட்டோர் இவற்றைப் பெற்றனர்.

 நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.பிரபாகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

0 comments:

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers