மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் - நெப்போலியன்

 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் - நெப்போலியன் விருதுநகர், ஜுலை.3 (டிஎன்எஸ்) விருதுநகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவது தொடர்பான சிறப்பு மதிப்பீட்டு முகாமை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் துறை இணை அமைச்சர் து நெப்போலியன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். மேலும் மாற்றுத் திறனாளிகளிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பிற்படுத்தப்பட்டோ ர் நலத்துறை அசைம்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் முனைவர் சே க சண்முகம், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ சுடற்கரைராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் பா கணேசன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஏ ஆர் ஆர் சீனிவாசன், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் வனராஜா ஆகியோர் பங்கேற்றனர். (டிஎன்எஸ்)

0 comments:

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers