தஞ்சாவூர், ஜூலை 6: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான நேர்காணல் அண்மையில் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான வயது வரம்பை தளர்த்திடும் நோக்கில், இந்த நேர்காணல் நடைபெற்றது. இதில் திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு ஒன்றியங்களைச் சேர்ந்த 36 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கு. கலியமூர்த்தி நேர்காணல் நடத்தினார். மாற்றுத் திறனாளிகளை மருத்துவர்கள் திருமலைப்பாண்டியன், அமுதவடிவு, பாலசுப்பிரமணியன், பாபுபாலசிங்கம் ஆகியோர் பரிசோதித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். சுரேஷ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிக்குமார் (சமூகப் பாதுகாப்பு), ஒரத்தநாடு வட்டாட்சியர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment