கலெக்டர் அலுவலகத்தில் "ரேம்ப்' வசதி மாற்று திறனாளிகள் கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர்: ஜூலை.1. "மாற்று திறனாளிகளுக்கு வசதியாக, கலெக்டர் அலுவலகத்தில் "ரேம்ப்' வசதி, சிறப்பு கழிப்பறை வசதி மற்றும் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்' என, மாற்று திறனாளிகளுக்கான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாவட்ட மையம், திருப்பூரில் துவக்கப்பட்டது. இதன் துவக்க விழா, எம்.சி., மஹாலில் நடந்தது; மாநில அமைப்பாளர் லட்சுமணன் தலைமை வகித்தார்.அப்போது, "காதுகேளாதோர், வாய்பேச இயலாதோர், உடல் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு உடையவர்கள், மங்கலான பார்வை உடையவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், மூன்றடி இரண்டு அங்குலத்துக்கு குறைவான உயரம் உள்ளவர்கள், இச்சங்கத்தில் உறுப்பினராக இணையலாம்' என அறிவிக்கப்பட்டது."மாற்று திறனாளிகளுக்கு என தனி குறைதீர்ப்பு முகாம் நடத்த வேண்டும்; அடையாள அட்டை பெறுவது உள்ளிட்ட ஒவ்வொரு தேவைக்கும் கலெக்டர் அலுவலகத்துக்கு வர வேண்டியுள்ளது. போக்குவரத்துக்கு உதவியாக ஒன்றிய அளவில் முகாம் நடத்த வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் "ரேம்ப்' வசதி, சிறப்பு கழிப்பறை வசதி, இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திருப்பூர் மாவட்ட மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான மைய அமைப் பாளராக ரங்கராஜ் தேர்வு செய்யப்பட்டார். மாநில துணை அமைப்பாளர் நம்பிராஜன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


0 comments:

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers