சென்னை, ஜூலை 10: சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் 40 பேருக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில், ஒரு ரூபாய் நாணயம்போட்டு பேசும் தொலைபேசிகளை ஏர்டெல் நிறுவனம் இலவசமாக அளித்துள்ளது.
இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவன செல்பேசி சேவைப் பிரிவு தலைவர் என். ஸ்ரீனிவாசன் கூறியது:
மாற்றுத் திறனாளிகளுக்கு வருவாய் வாய்ப்பை அளிப்பதோடு, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்காக 40 பேருக்கு இதுபோன்று தொலைபேசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இது அவர்களுடைய வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்
0 comments:
Post a Comment