திருச்சி, ஜூலை 2: திருச்சி மாவட்டம், நவல்பட்டு பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வங்கிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளுக்கு நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நவல்பட்டு அண்ணாநகர் பாரத ஸ்டேட் வங்கி, வங்கிகள் தினத்தை செம்பட்டு ஜே.எம்.ஜே. மாற்றுத் திறனுள்ள குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடியது.
இந்தக் காப்பகத்தில் உள்ள மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான பொருள்களை இலவசமாக பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது.
நிகழ்ச்சியில் வங்கி மேலாளர் கே. பந்தேநாவஸ், காப்பகத்தின் மேற்பார்வையாளர் லூபினி, வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, நவல்பட்டு காவலர் குடியிருப்பில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற ராஜேஸ்வரி, செய்யதுஅஜீஸ் ஆகியோருக்கு வங்கி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment