சேலம்: ""சினிமாவில் மாற்றுத்திறனாளிகள் இழிவுப்படுத்தப்படுவதை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று தமிழ்நாடு மாற்று திறனாளர்கள் நல்வாழ்வு சங்க தலைவர் வரதகுட்டி கூறினார்.சேலம் நேஷனல் ஹோட்டலில் நேற்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளர்கள் நல்வாழ்வு சங்கத்தின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, சங்க மாநில தலைவர் வரதகுட்டி, நிருபர்களிடம் கூறியதாவது: செப்டம்பரில் சென்னையில்
மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடக்கிறது. அதில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி ஆகியோருக்கு பாராட்டு விழா நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடக்கிறது. அதில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி ஆகியோருக்கு பாராட்டு விழா நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ஜினியரிங் பாடப்பிரிவில் மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் சீட் 3,000 ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 323 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். காலியாக உள்ள இன்ஜினியரிங் சீட்டுக்களை மாற்று திறனாளிகளின் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். கடந்த ஆண்டு மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய உயர் மட்டக்குழுவை அரசு நிர்ணயம் செய்தது. குழுவின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாற்று திறனாளிகள் சினிமாவில் இழிவுபடுத்தப்படுவதை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு தங்கும் விடுதியுடன் அரசு பள்ளி ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மாநில துணை தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர் மருதமுத்து, பொருளாளர் ரவி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
0 comments:
Post a Comment