மாற்று திறனாளிகள் செல்ல புதிய பாதை

ஈரோடு ஜூலை.1 : மாற்று திறனாளிகள் அலுவலகம் செல்வதற்காக புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மாற்று திறனாளிகள் அலுவலகம் உள்ளது. பல்வேறு நலத்திட்டங்களுக்கு மாற்று திறனாளிகள் விண்ணப்பம் கொடுக்கவோ, நலவாரிய அட்டை பெறவோ இங்குதான் வர வேண்டும். சமீபத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வளாகம் முழுவதும் தார் ரோடும் பணி நடந்துள்ளது. ஆனால், கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்துக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் அடர்ந்த செடி, கொடிகள் வளர்ந்து பாதை தாறுமாறாக இருந்தது. இவ்வழியே செல்ல முடியாமல் மாற்று திறனாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். இப்பிரச்னையை "காலைக்கதிர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இந்த இடத்தையும் தூர் வாரி, தாங்கள் எளிதாக செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் எனக் கோரி மாற்று திறனாளிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் தார் சாலை அமைக்க உத்தரவிட்டார். இதன்படி, மாற்று திறனாளிகள் அலுவலகம் செல்லும் வழியில் இருந்த புதர்கள் புல்டோசர் மூலம் அகற்றப்பட்டன. மாற்று திறனாளிகள் தங்கள் வாகனத்தில் எளிய முறையில் செல்ல தார் சாலை அமைக்கப்பட்டது. நேற்று முதல் இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தது. இதையறிந்த மாற்று திறனாளிகள் கலெக்டர் சுடலைகண்ணனை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தனர்.

0 comments:

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers