மனநலன் குன்றியோர் நலன்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
Posted by
vetri nadai
on Tuesday, June 29, 2010
/
Comments: (1)
திருச்சி, ஜூன் 29
மனநலன் குன்றியோரின் நலனுக்காக கூடுதலாக சிறப்புப் பள்ளிகள், காப்பகங்கள் தொடங்கப்பட வேண்டும். மேலும், அவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பை அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
உடல் ஊனமுற்றோர், மனநலன் குன்றியோர், கண் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாத குறைபாடு உடையோர் எனப் பல்வேறு வகையான உடல் ஊன குறைபாடுகளைக் கொண்டோர் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தனர்.
இவ்வாறு அழைக்கப்பட்டு வருபவர்கள் அனைவரும் இனி மாற்றுத் திறனாளிகள் என்றே அழைக்கப்படுவர் என, தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.
அந்த அறிவிப்போடு அவர் நின்றுவிடாமல், முன்பு உடல் ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத் துறை என்றழைக்கப்பட்டு வந்த துறையை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை எனப் பெயர் மாற்றம் செய்து, அத் துறையை தானே நிர்வகித்து வருகிறார்.
தற்போது தமிழக மொத்த மக்கள் தொகையில் 2.5 சதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாற்றுத் திறனாளிகள் பிரிவில் ஒன்றாகக் கருதப்படும் மனநலன் குன்றியோர் பல்வேறு நிலைகளில் உள்ளனர். கல்வி கற்கக் கூடியவர்கள், பயிற்சி பெறக் கூடியவர்கள், பராமரிக்கப்பட வேண்டியவர்கள் எனப் பல்வேறு நிலைகளில் அவர்கள் இருக்கின்றனர்.
சென்னை குரோம்பேட்டையில் மனநலன் குன்றியவர்களுக்காக சிறப்புப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், மனநலன் குன்றியவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலம் மாநிலம் முழுவதும் 10 மையங்களை அரசு நடத்தி வருகிறது.
இந்த மையங்களுக்குத் தேவையான நிதியையும் அரசு ஒதுக்குகிறது. இதுமட்டுமல்லாமல், மனநலன் குன்றிய குழந்தைகளின் பெற்றோருக்கு மாதம் ரூ. 500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மனநலன் குன்றிய குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலை தற்போது அவர்களின் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.
மனநலன் குன்றிய நிலையில் பிறக்கும் குழந்தைகளை மையங்களில் சேர்த்து விடுகிறோம். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் படித்து முடித்து விடுகிறார்கள். அதன் பின்னர், அவர்களது நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
அரசு சார்பில் சிறப்பு தொழில் மையங்களை உருவாக்கி, மனநலன் குன்றியவர்களின் திறனுக்கேற்ப தொழில் பயிற்சியை அளித்து, அவர்களின் வாழ்க்கை மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மனநலன் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள்.
என்ன செய்ய வேண்டும் அரசு: மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் சார்பில் 48 விதமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உயர் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கான தனிக் கட்டணத்தைக் கூட ரத்து செய்து அண்மையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதுமட்டுமல்லாமல், மாற்றுத் திறனாளிகள் 100 பேருக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்த 72 பேரில் தகுதியுள்ள 60 பேருக்கு ஆசிரியர் பணி நியமனமும் அண்மையில் வழங்கப்பட்டன. இவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு திமுக அரசு பல்வேறுவிதமான சலுகைகளையும், நலத் திட்டங்களையும் வழங்கி வருகிறது.
மனநலன் குன்றியவர்கள் கல்வி கற்க சிறப்புக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும், அந்த கல்வி வரைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்தக் கல்விக்கான பாடத் திட்டத்தை அரசே வழங்க வேண்டும். கல்வி வழங்கிய பிறகு அவர்கள் தங்குவதற்கு காப்பகம் அமைக்கப்பட வேண்டும்.
கல்வியைப் பெற்ற மனநலன் குன்றியவர்கள், தங்கள் வாழ்க்கையை தாங்களே நடத்த முடியும் என்ற நிலையை உருவாக்கும் வகையில், அவர்களுக்கு தொழில் பயிற்சியை அளிக்கும் விதமாக சிறப்பு மையங்களை உருவாக்க வேண்டும் என்கிறார் திருச்சி இன்டேக்ட் சிறப்புப் பள்ளியின் இயக்குநர் தாமஸ் எபிநேசர்.
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இல்லை?: மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சத இடஒதுக்கீடு வேலைவாய்ப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு தலா ஒரு சதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மனநலன் குன்றியவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடும் கிடைப்பதில்லை, வாய்ப்பும் கிடைப்பதில்லை.
வெளிநாடுகளில் உள்ளதுபோல, உறுதிப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு என்ற பிரிவின் கீழ், மொத்தமுள்ள இடங்களில் 30 சதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்கிறார் தாமஸ் எபிநேசர்.
மாற்றுத் திறனாளிகள் மீது அதிகம் அக்கறை கொண்டுள்ள தமிழக முதல்வர், மாநிலத்தில் அரசால் நடத்தப்படும் மனநலன் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளை மேலும் அதிகரிக்க வேண்டும், காப்பகங்களை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் மனநலன் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள்.
மாற்றுத்திறன் மாணவருக்கு கல்வி உதவித் தொகை
Posted by
vetri nadai
/
Comments: (0)
சென்னை,ஜுன்,30
மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்கு மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 500 பேருக்கு இந்த கல்வி உஹதவித் தொகை வழங்கப்படும்.
தொழில்கல்வி மற்றும் தொழிற்நுட்பக் கல்வி படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதன்படி விடுதியில் தங்கிப் படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு ரூ.1,000-மும், விடுதியில் தங்காத மாணவர்களுக்கு ரூ.700-ம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.அத்துடன் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.400-ம், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.700-ம் கல்வி உதவித் தொகை கிடைக்கும்.கல்வி உதவி தொகையைத் தவிர்த்து, கல்வி கட்டணம் ரூ.10 ஆயிரம் திரும்ப வழங்கப்படும். மாற்றுத் திறன் படைத்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை குறித்து அறிவிப்பை, அந்தந்த மாநில அரசுகள் கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை மாநில அரசுகளை கேட்டு கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாநில அரசுகளின் கல்வித்துறை தொடர்பான இணையதளங்களில், இதுபற்றிய விவரம் வெளியிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.இணையதள முகவரி: www.socialjustice.nic.in, www.nhfdc.or
g
g
மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் முன்பதிவற்ற ரயில் பெட்டிகள்: கருணாநிதி கோரிக்கை-ஏற்ற மம்தா
Posted by
vetri nadai
/
Comments: (0)
சென்னை: 
மாற்றுத் திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இயங்கி வந்ததை மத்திய ரயில்வே துறை முன்பதிவுப் பெட்டிகளாக மாற்றியமைத்தது.
இந்த மாற்றம், மாற்றுத் திறனாளிகளுக்கு பெரிதும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி
, அந்தப் பெட்டிகளை முன் போலவே முன்பதிவற்ற பெட்டிகளாக ரயில்களில் இணைத்திடக் கோரி ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 22ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில்,
முழுவதும் முன்பதிவுடன் இயங்கும் ரயில்கள் அல்லாத அனைத்து மெயில்கள்/ விரைவு ரயில்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் மீ்ண்டும் முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்படும் என்றும், இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான இரண்டு இருக்கைகள் ஒதுக்கீடு முறை மீண்டும் மாற்றுத் திறனாளிகளுக்காக முன்போலவே ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது
Read more
அனைத்து ரயில்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக மீண்டும் முன்பதிவற்ற பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர்
மம்தா பானர்ஜி
அறிவித்துள்ளார்.
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)

மாற்றுத் திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இயங்கி வந்ததை மத்திய ரயில்வே துறை முன்பதிவுப் பெட்டிகளாக மாற்றியமைத்தது.
இந்த மாற்றம், மாற்றுத் திறனாளிகளுக்கு பெரிதும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
முதல்வரின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 22ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில்,
முழுவதும் முன்பதிவுடன் இயங்கும் ரயில்கள் அல்லாத அனைத்து மெயில்கள்/ விரைவு ரயில்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் மீ்ண்டும் முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்படும் என்றும், இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான இரண்டு இருக்கைகள் ஒதுக்கீடு முறை மீண்டும் மாற்றுத் திறனாளிகளுக்காக முன்போலவே ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது
மாற்றுத் திறனாளிகள் சென்னை மாநகர பேருந்தில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்வதில் சிரமம் ஏற்படுகிறது.
Posted by
vetri nadai
on Monday, June 28, 2010
/
Comments: (0)
சென்னை, ஜுன்,27. மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருவது மாற்றுத் திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதிலும் அவர்கள் பல நடைமுறை சிக்கல்களை தினந்தோறும் சந்தித்துதான் வாழ்கின்றனர். அதில் ஒன்றாக சென்னை மாநகர பேருந்து பயணமும் இருக்கிறது. இவர்களுக்காக பெரும்பாலான பேருந்துகளில் ஓட்டுநர் இருக்கைக்கு பின் புறம் உள்ள இருக்கைகளில் முதியோர் /மாற்றுத் திறனாளிகள் அமர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சில பேருந்துகளில் இரண்டாவது அல்லது மூன்றாவது வரிசை இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சிரமம் என்னவென்றால் மூன்றாவது இருக்கையில் அமரும்போது செயற்கைக் கால் பொருத்தப்பட்ட நபர்கள் அமர்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த இடத்தில் தான் பேருந்து சக்கரத்தின் மேற்பகுதி பாதுகாப்பு பலகை இருக்கிறது. இங்கு சாதாரணமானவர்களே அமர சிரமப்படுகின்றனர். இதற்கு எதிர் புறம் உள்ள இருக்கையில் அமர்வது சற்று வசதியக உள்ளது. எனவே செயற்கைக்கால் பொருத்தப்பட்ட நபர்கள் காலை ஓரளவிற்கு நீட்டிகொண்டு செல்லும் வகையில் இருக்கைகளை ஒதுக்கித் தந்தால் வசதியாக இருக்கும்.
சமூக சேவையில் சிறந்து விளங்கும் சென்னை ஜெயின் டிரஸ்ட்.
Posted by
vetri nadai
on Saturday, June 26, 2010
/
Comments: (0)
சென்னை ஆதிநாத் ஜெயின் சேவ கேந்த்ரா சார்பில் 275 பயனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

சென்னை,ஜூ்ன்-26.
சென்னை சூளை வி.வி. கோயில் தெருவில் அமைந்திருக்கும் ஆதிநாத் ஜெயின் சேவா கேந்த்ரா சார்பில் ஏழை, எளிய மக்களுக்கும், மாற்றுத் திறன் படைத்தோருக்கும் பல்வேறு உதவிகள் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த அமைப்பின் சேவையில் இதுவரை சுமார் ஏழு லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்று 275 பயனாளிகளுக்கு செயற்கைக் கால், காலிபர், மூக்குக் கண்ணாடி உள்ளிட்ட இலவச உபகரணங்கள் வழங்கும் விழா சுவாமிஜி ஆச்சார்ய பந்து பெய்லெட் மகராஜாவின் சிஷ்யர் தலைமையில் நடைபெற்றது. நயா மந்திர் டிரஸ்டி புக்கராஜ் ஜி ஜெயின், டாடா ஸ்ட்ரீட் பாஸ்ன் ஜெயின் மந்திர் நிர்வாகி கௌத் சந்த்ஜி வெய்ட் ஆகியோர் முன்னிலை வகித்தார். பின்னர் சுவாமிஜி பிரார்த்தனை வழிபாடு செய்து விழாவினைத் துவக்கி வைத்தார். கேந்த்ரா செயலாளர் மோகன் ஜெயின் வரவேற்று பேசுகையில் ஆதிநாத் ஜெயின் சேவா கேந்த்ரா பல ஆண்டுகளாக இலவசமாக பொதுமக்களுக்கு சேவை புரிந்து வருவதாகவும், இதன் மூலம் சுமார் ஏழு லட்சம்பேர் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து சுவாமிஜி பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி ஆசி கூறினார். இத்ற்கான ஏற்பாடுகளை டாக்டர். ராஜேந்திரன் மற்றும் கேந்த்ரா நிர்வாகிகள், பணியாளர்கள் செய்திருந்தனர். உபகரணங்களைப் பெற்ற பயனாளிகள் கேந்த்ரா நிறுவனர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
சமூக சேவையில் சிறந்து விளங்கும் ஜெயின் டிரஸ்ட்!
சென்னை,ஜூ்ன்-26.
ஆதிநாத் ஜெயின் சேவ கேந்த்ரா சார்பில் வழங்கப்படும் இலவச உதவிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து செயலாளர் மோகன் ஜெயின் தெரிவித்ததாவது. "ஆதிநாத் ஜெயின் சேவ கேந்தரா பல நன்கொடையாளர்களின் நிதியைக் கொண்டு பொதுமக்களுக்கு சிறப்பான சேவை புரிந்து வருகிறது. இதன் மூலம் அனைத்து பணிகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் செயற்கைக் கால், காலிபர் பொருத்துதல், மூக்குக் கண்ணாடி வழங்குதல், கண் புரை நீக்குதல், அக்குபங்க்சர், அக்கு ப்ரஷர், பொது மருத்துவம், தையல் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், யோகா போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் பல பயனாளிகளுக்கு பல்வேறு இலவச உபகரணங்களையும், பயிற்சிகளையும், மதிய உணவும் நாங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு உறுதுணையாக பல நன்கொடையாளர்கள் உள்ளனர். இந்த வாய்ப்புகளை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல் ஆதரவற்றோர் சுமார் 50 பேரை பரமரிக்கும் வகையில் ஒரு ஆசிரமத்தை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம்" என்று மோகன் ஜெயின் தெரிவித்தார். இதுபோல் பல நல்ல சேவைகளை பொதுமக்களுக்கு செய்துவரும் ஜெயின் டிரஸ்டின் பணி சிறபான ஒன்றாகும்.
இலவச சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள் பெற அழைப்பு!
மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் முகாம் ஆதிநாத் ஜெயின் சேவ கேந்த்ரா சார்பில் விரைவில் நடைபெற்ற உள்ளது. இலவசமக வழங்கப்படும் இதனைப் பெற்று பயனடைய மாற்றுத் திறனளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இதுகுறித்து கேந்த்ரா நிர்வாகிகள் கூறுகையில் மாற்றுத் திறனாளிகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஆதிநாத் ஜெயின் சேவ கேந்த்ரா அலுவலக தொலைபேசி எண்: 044-26691616 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம் என்று கூறினர்.
சமூக சேவையில் சிறந்து விளங்கும் ஜெயின் டிரஸ்ட்!
சென்னை,ஜூ்ன்-26.
ஆதிநாத் ஜெயின் சேவ கேந்த்ரா சார்பில் வழங்கப்படும் இலவச உதவிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து செயலாளர் மோகன் ஜெயின் தெரிவித்ததாவது. "ஆதிநாத் ஜெயின் சேவ கேந்தரா பல நன்கொடையாளர்களின் நிதியைக் கொண்டு பொதுமக்களுக்கு சிறப்பான சேவை புரிந்து வருகிறது. இதன் மூலம் அனைத்து பணிகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் செயற்கைக் கால், காலிபர் பொருத்துதல், மூக்குக் கண்ணாடி வழங்குதல், கண் புரை நீக்குதல், அக்குபங்க்சர், அக்கு ப்ரஷர், பொது மருத்துவம், தையல் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், யோகா போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் பல பயனாளிகளுக்கு பல்வேறு இலவச உபகரணங்களையும், பயிற்சிகளையும், மதிய உணவும் நாங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு உறுதுணையாக பல நன்கொடையாளர்கள் உள்ளனர். இந்த வாய்ப்புகளை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல் ஆதரவற்றோர் சுமார் 50 பேரை பரமரிக்கும் வகையில் ஒரு ஆசிரமத்தை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம்" என்று மோகன் ஜெயின் தெரிவித்தார். இதுபோல் பல நல்ல சேவைகளை பொதுமக்களுக்கு செய்துவரும் ஜெயின் டிரஸ்டின் பணி சிறபான ஒன்றாகும்.
இலவச சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள் பெற அழைப்பு!
மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் முகாம் ஆதிநாத் ஜெயின் சேவ கேந்த்ரா சார்பில் விரைவில் நடைபெற்ற உள்ளது. இலவசமக வழங்கப்படும் இதனைப் பெற்று பயனடைய மாற்றுத் திறனளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இதுகுறித்து கேந்த்ரா நிர்வாகிகள் கூறுகையில் மாற்றுத் திறனாளிகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஆதிநாத் ஜெயின் சேவ கேந்த்ரா அலுவலக தொலைபேசி எண்: 044-26691616 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம் என்று கூறினர்.
இப்படித்தான் இருக்க வேண்டும்... உறவு..!
Posted by
vetri nadai
on Friday, June 25, 2010
/
Comments: (0)
உண்மை அன்புக்கு.. எதுவுமே தடையில்லை..!
கணவர் இவருக்கு அதிர்ஷ்டமே!
(Rosemarie “Rose” Siggins)

இனிய இல்லறத்துக்கு இவர்கள் ஓர் உதாரணம்..

இடையூறுகளை வெல்லும் பெண்

இரு குழந்தைகளின் சிறந்த தாய்!


இவள் கணவனின் அன்பிற்கு கோவிலே கட்டலாம்..




தன்னம்பிக்கைக்கு விருதுகள் பல கொடுத்தாலும் தகும்..





Rosemarrie siggnis
உலகத்தமிழ் மாநாட்டில் உரையாற்றும் மாற்றுத் திறனாளி கவிஞர் ஏகலைவன்
Posted by
vetri nadai
on Monday, June 21, 2010
/
Comments: (1)

பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள ஏகலைவன் சேலத்தைச் சொந்த ஊராகக் கொண்டடவர். 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 13வது வயதில் நிகழ்ந்த ஒரு இரயில் விபத்தால் உடல் ஊனமடைந்தபோதிலும் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் (தன்னம்பிக்கைக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள்) என்று தனது படைப்புகள் மூலமாக தமிழ் இலக்கிய வட்டத்தில் வலம் வரும் இவர் பல்வேறு இதழ்களில் படைப்புகளை எழுதி வருவதோடு, வாசகன் பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை நிறுவி, பதிப்பாளராகவும் இயங்கி வருகிறார்.
Posted by
vetri nadai
on Sunday, June 20, 2010
/
Comments: (0)
கண் தானம் ஹைக்கூ
இறந்த பின்னும்
இருவருக்குப் பயன்படுமே
விழிக்கொடை
மண்ணுக்கும் தீக்கும்
இரையாகும் விழிகளை
மனிதனுக்கு வழங்குகள்
இறந்த பின்னும்
இவ்வுலகை இரசிக்க
கண் தானம்
அகப்பார்வை ஒன்றே போதும்.....
இறந்த பின்னும்
இருவருக்குப் பயன்படுமே
விழிக்கொடை
மண்ணுக்கும் தீக்கும்
இரையாகும் விழிகளை
மனிதனுக்கு வழங்குகள்
இறந்த பின்னும்
இவ்வுலகை இரசிக்க
கண் தானம்
அகப்பார்வை ஒன்றே போதும்.....
புறப்பார்வை இரண்டு இல்லா விட்டாலும்
அகப்பார்வை ஆயிரம் பெற்றவர் நீங்கள்
சாதாரண வாழ்க்கை எங்களுக்கு
சாரனை வாழ்க்கை உங்களுக்கு
சராசரி மனிதர்கள் நாங்கள்
சரித்திர மனிதர்கள் நீங்கள்
வாழ்க்கையில் போராட்டம் உண்டு எங்களுக்கு
வாழ்க்கையே போராட்டம் உங்களுக்கு
நூறு கோடியில் சிறு புள்ளி நாங்கள்
கோடியில் ஒருவர் நீங்கள்
சிறு துன்பத்திற்க்கு கலங்கும் நாங்கள்
பெரும் துன்பத்திற்க்கு கலங்காதவர் நீங்கள்
வாழ்க்கையில் இருட்டு என வருந்துபவர் நாங்கள்
இருட்டே வாழ்க்கை என்ற போதும்
ஒளி ஏற்றுபவர் நீங்கள்
இருக்கை பின்னத்தெரியாது பார்வையுள்ள
எங்களுக்கு
இருக்கையை சிறப்பாக பின்னுபவர்கள் நீங்கள்
விழியில் தூசி விழுந்தால் துடிப்போம் நாங்கள்
விழியே தூசியானதால் துடிப்பதில்லை நீங்கள்
பிறந்தோம் இறந்தோம் என்பது எங்களுக்கு
பிறந்தோம் சாதித்தோம் என்பது உங்களுக்கு.
இரா. ரவி
மதுரை.
அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு
Posted by
vetri nadai
on Saturday, June 19, 2010
/
Comments: (0)

அனைத்து அரசுப்பணி மாற்றுத் திறனாளிகள் முதலாவது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சீனிவாசன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சந்த்ர குமார், செயலாளர் ராமசாமி, செயற்குழு உறுப்பினர் கருப்பையா, இணைச் செயலாளர் ரேமாரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொல்.திருமாவளவன், இளங்கோவன், சமூகநல வாரியத் தலைவர் கவிஞர். சல்மா ஆகியோர் சங்கத்தின் தீர்மானங்களை ஆதரித்துப் பேசினர். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிதம்பரநாதன், பொதுச் செயலாளர் சிம்மச்சந்திரன், துணைத்தலைவர் தீபக், துணைச்செயலாளர் முஸ்தபா, லலிதாம்பிகை, நலவாரிய உறுப்பினர் தங்கம், மகளிரணி அமைப்பாளர் அருணாதேவி ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். துணைத்தலைவர் பூபதி மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழகம் முழுவதம் தமிழக முதல்வர் வழங்கிவரும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்க உரையாற்றிப் பாராட்டிப் பேடினார். மாநில துணைத் தலைவர் அண்ணாத்துரை உட்பட பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டுத் தீர்மானங்களை செயலாளர் ராமசாமி வாசித்தார். திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், செயலாளர் மாரிக்கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர். இணைச்செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோரிக்கைத் தீர்மானங்கள்
* சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத் திறனளிகளுக்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் பணி வழங்கவேண்டும்,
* வேலைவாய்ப்பு பெற இயலாத மாற்றுத் திறனாளிகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
* தொகுப்பூதிய அடிப்படையில் குறிப்பாக டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதிக்கேற்ப பிற துறைகளில் உள்ள காலி இடங்களில் நிரந்தரப் பணி வழங்க வேண்டும்.
* பதவி உயர்வு அல்லது இடமாறுதலின்போது வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணிபுரிய ஆணை வழங்கவேண்டும்.
* குறைந்த வட்டியில் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன்ங்களை வாங்குவதற்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வசதி செய்துதர வேண்டும்.
* அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய தடையற்ற சூழலையும், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.
* மத்திய அரசுக்கு இணையான போக்குவரத்துப் படியை வழங்குவதோடு முழுமையான ஓய்வூதியத்திற்கான பணியின் காலவரம்பை ௨0 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும்.
* தொழில்வரி, வருமானவரி விலக்குப்பெற மாற்றுத்திறனாளிகளின் தேசிய அடையாள அட்டையையே மருத்துவச் சான்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* போக்குவரத்துக் கழகங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலகுவான பணிகளை செய்திட வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
* மாற்றுத் திறன்படைத்த பணியாளர்கள் காலை நேரத்தில் பணிக்கு வரும்பொழுது வாகன நெரிசலால் ஏற்படும் இடையூரினை மனதில் கொண்டு பணிக்கு வரும் நேரத்தில் 15 நிமிடங்கள் தாமதமாக வர சலுகை வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மாநாட்டு ஏற்பாடுகளை காமராஜ், சங்கீதா மற்றும் செய்திருந்தனர்.
* வேலைவாய்ப்பு பெற இயலாத மாற்றுத் திறனாளிகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
* தொகுப்பூதிய அடிப்படையில் குறிப்பாக டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதிக்கேற்ப பிற துறைகளில் உள்ள காலி இடங்களில் நிரந்தரப் பணி வழங்க வேண்டும்.
* பதவி உயர்வு அல்லது இடமாறுதலின்போது வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணிபுரிய ஆணை வழங்கவேண்டும்.
* குறைந்த வட்டியில் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன்ங்களை வாங்குவதற்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வசதி செய்துதர வேண்டும்.
* அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய தடையற்ற சூழலையும், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.
* மத்திய அரசுக்கு இணையான போக்குவரத்துப் படியை வழங்குவதோடு முழுமையான ஓய்வூதியத்திற்கான பணியின் காலவரம்பை ௨0 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும்.
* தொழில்வரி, வருமானவரி விலக்குப்பெற மாற்றுத்திறனாளிகளின் தேசிய அடையாள அட்டையையே மருத்துவச் சான்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* போக்குவரத்துக் கழகங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலகுவான பணிகளை செய்திட வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
* மாற்றுத் திறன்படைத்த பணியாளர்கள் காலை நேரத்தில் பணிக்கு வரும்பொழுது வாகன நெரிசலால் ஏற்படும் இடையூரினை மனதில் கொண்டு பணிக்கு வரும் நேரத்தில் 15 நிமிடங்கள் தாமதமாக வர சலுகை வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மாநாட்டு ஏற்பாடுகளை காமராஜ், சங்கீதா மற்றும் செய்திருந்தனர்.
Powered by Blogger.