சென்னை, ஜுன்,27. மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருவது மாற்றுத் திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதிலும் அவர்கள் பல நடைமுறை சிக்கல்களை தினந்தோறும் சந்தித்துதான் வாழ்கின்றனர். அதில் ஒன்றாக சென்னை மாநகர பேருந்து பயணமும் இருக்கிறது. இவர்களுக்காக பெரும்பாலான பேருந்துகளில் ஓட்டுநர் இருக்கைக்கு பின் புறம் உள்ள இருக்கைகளில் முதியோர் /மாற்றுத் திறனாளிகள் அமர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சில பேருந்துகளில் இரண்டாவது அல்லது மூன்றாவது வரிசை இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சிரமம் என்னவென்றால் மூன்றாவது இருக்கையில் அமரும்போது செயற்கைக் கால் பொருத்தப்பட்ட நபர்கள் அமர்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த இடத்தில் தான் பேருந்து சக்கரத்தின் மேற்பகுதி பாதுகாப்பு பலகை இருக்கிறது. இங்கு சாதாரணமானவர்களே அமர சிரமப்படுகின்றனர். இதற்கு எதிர் புறம் உள்ள இருக்கையில் அமர்வது சற்று வசதியக உள்ளது. எனவே செயற்கைக்கால் பொருத்தப்பட்ட நபர்கள் காலை ஓரளவிற்கு நீட்டிகொண்டு செல்லும் வகையில் இருக்கைகளை ஒதுக்கித் தந்தால் வசதியாக இருக்கும்.
மாற்றுத் திறனாளிகள் சென்னை மாநகர பேருந்தில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்வதில் சிரமம் ஏற்படுகிறது.
Posted by
vetri nadai
on Monday, June 28, 2010
Powered by Blogger.
0 comments:
Post a Comment