சமூக சேவையில் சிறந்து விளங்கும் சென்னை ஜெயின் டிரஸ்ட்.



சென்னை ஆதிநாத் ஜெயின் சேவ கேந்த்ரா சார்பில் 275 பயனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
சென்னை,ஜூ்ன்-26.
சென்னை சூளை வி.வி. கோயில் தெருவில் அமைந்திருக்கும் ஆதிநாத் ஜெயின் சேவா கேந்த்ரா சார்பில் ஏழை, எளிய மக்களுக்கும், மாற்றுத் திறன் படைத்தோருக்கும் பல்வேறு உதவிகள் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த அமைப்பின் சேவையில் இதுவரை சுமார் ஏழு லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்று 275 பயனாளிகளுக்கு செயற்கைக் கால், காலிபர், மூக்குக் கண்ணாடி உள்ளிட்ட இலவச உபகரணங்கள் வழங்கும் விழா சுவாமிஜி ஆச்சார்ய பந்து பெய்லெட் மகராஜாவின் சிஷ்யர் தலைமையில் நடைபெற்றது. நயா மந்திர் டிரஸ்டி புக்கராஜ் ஜி ஜெயின், டாடா ஸ்ட்ரீட் பாஸ்ன் ஜெயின் மந்திர் நிர்வாகி கௌத் சந்த்ஜி வெய்ட் ஆகியோர் முன்னிலை வகித்தார். பின்னர் சுவாமிஜி பிரார்த்தனை வழிபாடு செய்து விழாவினைத் துவக்கி வைத்தார். கேந்த்ரா செயலாளர் மோகன் ஜெயின் வரவேற்று பேசுகையில் ஆதிநாத் ஜெயின் சேவா கேந்த்ரா பல ஆண்டுகளாக இலவசமாக பொதுமக்களுக்கு சேவை புரிந்து வருவதாகவும், இதன் மூலம் சுமார் ஏழு லட்சம்பேர் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து சுவாமிஜி பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி ஆசி கூறினார். இத்ற்கான ஏற்பாடுகளை டாக்டர். ராஜேந்திரன் மற்றும் கேந்த்ரா நிர்வாகிகள், பணியாளர்கள் செய்திருந்தனர். உபகரணங்களைப் பெற்ற பயனாளிகள் கேந்த்ரா நிறுவனர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


சமூக சேவையில் சிறந்து விளங்கும் ஜெயின் டிரஸ்ட்!
சென்னை,ஜூ்ன்-26.
ஆதிநாத் ஜெயின் சேவ கேந்த்ரா சார்பில் வழங்கப்படும் இலவச உதவிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து செயலாளர் மோகன் ஜெயின் தெரிவித்ததாவது. "ஆதிநாத் ஜெயின் சேவ கேந்தரா பல நன்கொடையாளர்களின் நிதியைக் கொண்டு பொதுமக்களுக்கு சிறப்பான சேவை புரிந்து வருகிறது. இதன் மூலம் அனைத்து பணிகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் செயற்கைக் கால், காலிபர் பொருத்துதல், மூக்குக் கண்ணாடி வழங்குதல், கண் புரை நீக்குதல், அக்குபங்க்சர், அக்கு ப்ரஷர், பொது மருத்துவம், தையல் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், யோகா போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் பல பயனாளிகளுக்கு பல்வேறு இலவச உபகரணங்களையும், பயிற்சிகளையும், மதிய உணவும் நாங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு உறுதுணையாக பல நன்கொடையாளர்கள் உள்ளனர். இந்த வாய்ப்புகளை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல் ஆதரவற்றோர் சுமார் 50 பேரை பரமரிக்கும் வகையில் ஒரு ஆசிரமத்தை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம்" என்று மோகன் ஜெயின் தெரிவித்தார். இதுபோல் பல நல்ல சேவைகளை பொதுமக்களுக்கு செய்துவரும் ஜெயின் டிரஸ்டின் பணி சிறபான ஒன்றாகும்.



இலவச சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள் பெற அழைப்பு!

மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் முகாம் ஆதிநாத் ஜெயின் சேவ கேந்த்ரா சார்பில் விரைவில் நடைபெற்ற உள்ளது. இலவசமக வழங்கப்படும் இதனைப் பெற்று பயனடைய மாற்றுத் திறனளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இதுகுறித்து கேந்த்ரா நிர்வாகிகள் கூறுகையில் மாற்றுத் திறனாளிகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஆதிநாத் ஜெயின் சேவ கேந்த்ரா அலுவலக தொலைபேசி எண்: 044-26691616 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம் என்று கூறினர்.

0 comments:

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers