மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்கு மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 500 பேருக்கு இந்த கல்வி உஹதவித் தொகை வழங்கப்படும்.
தொழில்கல்வி மற்றும் தொழிற்நுட்பக் கல்வி படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதன்படி விடுதியில் தங்கிப் படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு ரூ.1,000-மும், விடுதியில் தங்காத மாணவர்களுக்கு ரூ.700-ம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.அத்துடன் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.400-ம், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.700-ம் கல்வி உதவித் தொகை கிடைக்கும்.கல்வி உதவி தொகையைத் தவிர்த்து, கல்வி கட்டணம் ரூ.10 ஆயிரம் திரும்ப வழங்கப்படும். மாற்றுத் திறன் படைத்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை குறித்து அறிவிப்பை, அந்தந்த மாநில அரசுகள் கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை மாநில அரசுகளை கேட்டு கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாநில அரசுகளின் கல்வித்துறை தொடர்பான இணையதளங்களில், இதுபற்றிய விவரம் வெளியிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.இணையதள முகவரி: www.socialjustice.nic.in, www.nhfdc.or
g
g
0 comments:
Post a Comment