இவர்களுக்கு நிதி, சட்ட உதவி அளிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி அசம்பாவிதம் அல்லது விபத்தால் பாதிக்கப்படுவோருக்கு உதவ, கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்படும். இதில் மாவட்ட எஸ்.பி., உறுப்பினராகவும், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி செயல் அலுவராகவும் செயல்படுவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க, இக்குழு அரசுக்கு பரிந்துரைக்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் சலுகை : அசம்பாவிதங்களில் நிதி உதவி
இவர்களுக்கு நிதி, சட்ட உதவி அளிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி அசம்பாவிதம் அல்லது விபத்தால் பாதிக்கப்படுவோருக்கு உதவ, கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்படும். இதில் மாவட்ட எஸ்.பி., உறுப்பினராகவும், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி செயல் அலுவராகவும் செயல்படுவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க, இக்குழு அரசுக்கு பரிந்துரைக்கும்.
பார்வையற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள்: ஜப்பானிய துணை தூதர் தகவல்
சங்கர நேத்ராலயாவின் பார்வை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்து சாதனை படைத்துள்ளது.
சினிமாவில் மாற்றுத்திறனாளிகள் :தலைவர் ஆதங்கம்
மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடக்கிறது. அதில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி ஆகியோருக்கு பாராட்டு விழா நடக்கிறது.
100 மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மலர்ந்தது வசந்தம்
மாற்றுத் திறனாளிகளுக்கு ஏர்டெல் உதவி
அழகப்பா பல்கலைக்கழக கல்வி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் ரத்து
மாற்று திறனாளிகளுக்கான நேர்காணல்
14 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி பொருத்திய மோட்டார் சைக்கிள்கள்
மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை உடனுக்குடன் பரிசீலிக்க வேண்டுகோள்
மாற்றுத் திறனாளிகள்அமைச்சர் மம்தா பானர்ஜிக்கும்,த்மிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிதுள்ளனர்.



மாற்றுத் திறனாளி திருமண நிதியுதவி ரூ.25 ஆயிரமாக உயர்வு

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் - நெப்போலியன்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி
அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ்,மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவியர் சேர்க்கை
மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வேலைவாய்ப்பு முகாம்: மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் பேச்சு
மாற்றுத் திறனாளர்கள் காப்பகத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி உதவி
மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 34 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் "ரேம்ப்' வசதி மாற்று திறனாளிகள் கூட்டத்தில் தீர்மானம்
திருப்பூர்: ஜூலை.1. "மாற்று திறனாளிகளுக்கு வசதியாக, கலெக்டர் அலுவலகத்தில் "ரேம்ப்' வசதி, சிறப்பு கழிப்பறை வசதி மற்றும் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்' என, மாற்று திறனாளிகளுக்கான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாவட்ட மையம், திருப்பூரில் துவக்கப்பட்டது. இதன் துவக்க விழா, எம்.சி., மஹாலில் நடந்தது; மாநில அமைப்பாளர் லட்சுமணன் தலைமை வகித்தார்.அப்போது, "காதுகேளாதோர், வாய்பேச இயலாதோர், உடல் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு உடையவர்கள், மங்கலான பார்வை உடையவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், மூன்றடி இரண்டு அங்குலத்துக்கு குறைவான உயரம் உள்ளவர்கள், இச்சங்கத்தில் உறுப்பினராக இணையலாம்' என அறிவிக்கப்பட்டது."மாற்று திறனாளிகளுக்கு என தனி குறைதீர்ப்பு முகாம் நடத்த வேண்டும்; அடையாள அட்டை பெறுவது உள்ளிட்ட ஒவ்வொரு தேவைக்கும் கலெக்டர் அலுவலகத்துக்கு வர வேண்டியுள்ளது. போக்குவரத்துக்கு உதவியாக ஒன்றிய அளவில் முகாம் நடத்த வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் "ரேம்ப்' வசதி, சிறப்பு கழிப்பறை வசதி, இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திருப்பூர் மாவட்ட மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான மைய அமைப் பாளராக ரங்கராஜ் தேர்வு செய்யப்பட்டார். மாநில துணை அமைப்பாளர் நம்பிராஜன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாற்று திறனாளிகள் செல்ல புதிய பாதை
ஈரோடு ஜூலை.1 : மாற்று திறனாளிகள் அலுவலகம் செல்வதற்காக புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மாற்று திறனாளிகள் அலுவலகம் உள்ளது. பல்வேறு நலத்திட்டங்களுக்கு மாற்று திறனாளிகள் விண்ணப்பம் கொடுக்கவோ, நலவாரிய அட்டை பெறவோ இங்குதான் வர வேண்டும். சமீபத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வளாகம் முழுவதும் தார் ரோடும் பணி நடந்துள்ளது. ஆனால், கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்துக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் அடர்ந்த செடி, கொடிகள் வளர்ந்து பாதை தாறுமாறாக இருந்தது. இவ்வழியே செல்ல முடியாமல் மாற்று திறனாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். இப்பிரச்னையை "காலைக்கதிர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இந்த இடத்தையும் தூர் வாரி, தாங்கள் எளிதாக செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் எனக் கோரி மாற்று திறனாளிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் தார் சாலை அமைக்க உத்தரவிட்டார். இதன்படி, மாற்று திறனாளிகள் அலுவலகம் செல்லும் வழியில் இருந்த புதர்கள் புல்டோசர் மூலம் அகற்றப்பட்டன. மாற்று திறனாளிகள் தங்கள் வாகனத்தில் எளிய முறையில் செல்ல தார் சாலை அமைக்கப்பட்டது. நேற்று முதல் இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தது. இதையறிந்த மாற்று திறனாளிகள் கலெக்டர் சுடலைகண்ணனை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தனர். |