சென்னையில் டிச.1ம் தேதி மாநில போட்டிக்கு மாற்றுத் திறனாளிகள் தேர்வு
அனவரதநல்லூர் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்ல நிர்வாகி டாக்டர் கருணா செல்லையா, புறநகர் ரோட்டரி சங்க தலைவர் நயினா முகம்மது, ஐ.ஓ.பி ராமசாமி, காது கேளோதோர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திர மோகன், பார்வையற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் கிங்ஸ்டன், புனித அன்னாள் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சபீனா, மாற்றுத் திறனாளிகள் அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊனம் என்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக இருக்க கூடாது."
மனிதனுக்கு ஊனம் என்றால், வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டும். இவர்கள் பெற்றோருக்கு பாரம் என சிலர் நினைக்கின்றனர். ஊனமுற்றவர்கள் உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என, உறவினர்கள் நினைக்கும் இந்த காலத்தில் இரு கைகளை இழந்த ஒரு பெண் பெற்றோருக்கும் உதவியாக வேலை செய்கிறார்
.இந்த இளம்பெண்ணின் பெயர் பரமேஸ்வரி(28). இவர் ஐந்தாவது வரை படித்துள்ளார். பிறவிலேயே இரு கைகள் இல்லை. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் குருவப்ப நாயுடு கண்டிகையில் பிறந்த இவருடைய தந்தை பெயர் மணிவேல்; தாய் ஹெலன்.இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள். மூன்று பெண்கள், 2 ஆண்கள். இதில் மூத்தபெண் பரமேஸ்வரி.
மணிவேல் கே.ஜி.கண்டிகை பஜாரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அடுப்பு எரிப்பது, காய்கறி வெட்டி கொடுப்பது, பாத்திரங்கள் தேய்ப்பது உள்பட பல்வேறு பணிகளை பரமேஸ்வரி கால்களால் செய்கிறார்.இது தவிர வீட்டில் துணி துவைப்பது, தலைவாரி பூ முடிப்பது,கேஸ் அடுப்பு பற்ற வைப்பது, புத்தகம் படிப்பது, எழுதுவது, மொபைல் போன் பேசுவது உட்பட, அனைத்து வேலைகளையும் அவரே இரு கால்களால் செய்து கொள்கிறார்.
இது குறித்து பரமேஸ்வரி கூறியதாவது: "ஊனம் என்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக இருக்க கூடாது. ஊனமாக பிறந்துவிட்டோமே என்று கவலைப்படாமல், மனத் தைரியத்துடன் செயல்பட வேண்டும். நாம் மற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல், நம்முடைய வேலைகளை நாமே செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.அதே போல் பெற்றோருக்கு நம்மால் முடிந்த உதவிகளையும் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சிலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனமான செயல். ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் தனித் திறமை உள்ளது. அதை தைரியத்துடன் செயல்படுத்தினால், நினைத்ததை சாதித்து காட்டலாம்.எனக்கு இரு கைகள் இல்லை என்றாலும், அனைத்து வேலைகளையும் நானே செய்துக் கொள்ளும் திறமை என்னிடம் உள்ளது. ஆகையால், தமிழக அரசு எனக்கு கடை வைப்பதற்கு நிதியுதவி வழங்கினால், நான் கடை வைத்து அதில் திறம்பட வியாபாரம் செய்து வாழ்க்கையில் முன்னேறி காட்டுவேன்.இவ்வாறு பரமேஸ்வரி கூறினார்.
இரு கைகளும், ஆரோக்கியமும், வாய்ப்பும், வசதிகளும் இருந்தும் சோம்பேறிகளாக சுற்றி வருபவர்கள் இடையே, இரு கைகளும் இல்லாமல் வாழ்க்கையில் போராடிவரும் பெண்ணை பார்த்து அப்பகுதி மக்கள் வியக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு இப்போது ஒரே வாரத்தில் சான்றிதழ்
.
வேலைவாய்ப்பு புதுப்பித்தல்: மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
மாற்றுத் திறனாளிகளான அனைத்து பதிவுதாரர்களுக்கும் அதாவது, பார்வையற்றோர், செவி இழந்தோர், வாய் பேசாதோர், மனநலம் குன்றியோர், உடல் உறுப்பு பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பித்தல் செய்வதில் இருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
டிச., 3 மாற்றுத் திறனாளிகள் தினம் மாநில விருதுகளுக்கு வரவேற்பு
அவர்களுக்காக சேவை புரிந்தோருக்கு மாநில விருதுகளும் வழங்கப்படும்.மிகச் சிறப்பாக பணியாற்றி சுயதொழில் புரிந்து வரும் மாற்றுத் திறனாளிகள், மிகச் சிறந்த முறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்கள், மிகச் சிறப்பாக மறுவாழ்வு உதவிகளை அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள், சமூகப் பணியாளர்கள், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கி வரும் தொழில் நிறுவனங்கள், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும்.இவ்விருதுகளுக்காக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இம்மாதம் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது சென்னையில் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்திலோ கிடைக்கும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்செயலால் பாதித்த மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
வன்செயல்களால் காயமடைந்த மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 5,000 ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படும். வழக்கு சம்பந்தமாக ஒருமுறை நீதிமன்றத்துக்கு செல்ல 200 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
இலவச சீருடை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் விழா



ஆர்.பாக்கியராஜ், இரா.சுப்பிரமணியன், தேவராஜன், பாலகிருஷ்ணன், கிளமண்ட் மற்றும் மணவாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், பொருளாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் சலுகை : அசம்பாவிதங்களில் நிதி உதவி
இவர்களுக்கு நிதி, சட்ட உதவி அளிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி அசம்பாவிதம் அல்லது விபத்தால் பாதிக்கப்படுவோருக்கு உதவ, கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்படும். இதில் மாவட்ட எஸ்.பி., உறுப்பினராகவும், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி செயல் அலுவராகவும் செயல்படுவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க, இக்குழு அரசுக்கு பரிந்துரைக்கும்.
பார்வையற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள்: ஜப்பானிய துணை தூதர் தகவல்
சங்கர நேத்ராலயாவின் பார்வை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்து சாதனை படைத்துள்ளது.
சினிமாவில் மாற்றுத்திறனாளிகள் :தலைவர் ஆதங்கம்
மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடக்கிறது. அதில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி ஆகியோருக்கு பாராட்டு விழா நடக்கிறது.
100 மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மலர்ந்தது வசந்தம்
மாற்றுத் திறனாளிகளுக்கு ஏர்டெல் உதவி
அழகப்பா பல்கலைக்கழக கல்வி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் ரத்து
மாற்று திறனாளிகளுக்கான நேர்காணல்
14 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி பொருத்திய மோட்டார் சைக்கிள்கள்
மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை உடனுக்குடன் பரிசீலிக்க வேண்டுகோள்
மாற்றுத் திறனாளிகள்அமைச்சர் மம்தா பானர்ஜிக்கும்,த்மிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிதுள்ளனர்.



மாற்றுத் திறனாளி திருமண நிதியுதவி ரூ.25 ஆயிரமாக உயர்வு

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் - நெப்போலியன்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி
அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ்,மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவியர் சேர்க்கை
மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வேலைவாய்ப்பு முகாம்: மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் பேச்சு
மாற்றுத் திறனாளர்கள் காப்பகத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி உதவி
மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 34 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் "ரேம்ப்' வசதி மாற்று திறனாளிகள் கூட்டத்தில் தீர்மானம்
திருப்பூர்: ஜூலை.1. "மாற்று திறனாளிகளுக்கு வசதியாக, கலெக்டர் அலுவலகத்தில் "ரேம்ப்' வசதி, சிறப்பு கழிப்பறை வசதி மற்றும் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்' என, மாற்று திறனாளிகளுக்கான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாவட்ட மையம், திருப்பூரில் துவக்கப்பட்டது. இதன் துவக்க விழா, எம்.சி., மஹாலில் நடந்தது; மாநில அமைப்பாளர் லட்சுமணன் தலைமை வகித்தார்.அப்போது, "காதுகேளாதோர், வாய்பேச இயலாதோர், உடல் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு உடையவர்கள், மங்கலான பார்வை உடையவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், மூன்றடி இரண்டு அங்குலத்துக்கு குறைவான உயரம் உள்ளவர்கள், இச்சங்கத்தில் உறுப்பினராக இணையலாம்' என அறிவிக்கப்பட்டது."மாற்று திறனாளிகளுக்கு என தனி குறைதீர்ப்பு முகாம் நடத்த வேண்டும்; அடையாள அட்டை பெறுவது உள்ளிட்ட ஒவ்வொரு தேவைக்கும் கலெக்டர் அலுவலகத்துக்கு வர வேண்டியுள்ளது. போக்குவரத்துக்கு உதவியாக ஒன்றிய அளவில் முகாம் நடத்த வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் "ரேம்ப்' வசதி, சிறப்பு கழிப்பறை வசதி, இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திருப்பூர் மாவட்ட மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான மைய அமைப் பாளராக ரங்கராஜ் தேர்வு செய்யப்பட்டார். மாநில துணை அமைப்பாளர் நம்பிராஜன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாற்று திறனாளிகள் செல்ல புதிய பாதை
ஈரோடு ஜூலை.1 : மாற்று திறனாளிகள் அலுவலகம் செல்வதற்காக புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மாற்று திறனாளிகள் அலுவலகம் உள்ளது. பல்வேறு நலத்திட்டங்களுக்கு மாற்று திறனாளிகள் விண்ணப்பம் கொடுக்கவோ, நலவாரிய அட்டை பெறவோ இங்குதான் வர வேண்டும். சமீபத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வளாகம் முழுவதும் தார் ரோடும் பணி நடந்துள்ளது. ஆனால், கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்துக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் அடர்ந்த செடி, கொடிகள் வளர்ந்து பாதை தாறுமாறாக இருந்தது. இவ்வழியே செல்ல முடியாமல் மாற்று திறனாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். இப்பிரச்னையை "காலைக்கதிர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இந்த இடத்தையும் தூர் வாரி, தாங்கள் எளிதாக செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் எனக் கோரி மாற்று திறனாளிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் தார் சாலை அமைக்க உத்தரவிட்டார். இதன்படி, மாற்று திறனாளிகள் அலுவலகம் செல்லும் வழியில் இருந்த புதர்கள் புல்டோசர் மூலம் அகற்றப்பட்டன. மாற்று திறனாளிகள் தங்கள் வாகனத்தில் எளிய முறையில் செல்ல தார் சாலை அமைக்கப்பட்டது. நேற்று முதல் இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தது. இதையறிந்த மாற்று திறனாளிகள் கலெக்டர் சுடலைகண்ணனை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தனர். |
செம்மொழி மாநாடு முதல்வருக்கு மாற்று திறனாளிகள் பாராட்டு
மனநலன் குன்றியோர் நலன்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
மாற்றுத்திறன் மாணவருக்கு கல்வி உதவித் தொகை
சென்னை,ஜுன்,30
g